இலுப்பூரில் கொடி அணிவகுப்பு!

இலுப்பூரில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் தமிழக போலீஸார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-10 04:56 GMT

கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களர்கள் பதற்றமின்றி வாக்களிக்க ஏதுவாக சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் தமிழக போலீஸார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி ஏற்கெனவே அந்தந்தவாக்குச்சாவடி பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறையுடன் மத்திய சேமக் காவல் படை(சிஆர்பிஎப்) இணைந்து இலுப்பூரில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடத்தினர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் காவல் ஆய்வாளர்கள் தயாளன் (இலுப்பூர்), லதா (அன்னவாசல்), சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட நுற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News