மானாமதுரையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மானாமதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி தமிழக போலீசார் மற்றும் நாகலாந்து பட்டாலியன் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

Update: 2024-04-08 03:38 GMT

 கொடி அணிவகுப்பு 

லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாக்காளர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிவகங்கை மாவட்ட காவலர்கள் சார்பில் மானாமதுரையில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம் ,மானாம துரை டி.எஸ். பி.,கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் தெய்வீக பாண்டியன், அருண்குமார், சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள் பூபதி ராஜா, பாலசதீஷ், சந்தான கருப்பு மற்றும் போலீசார், நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பட்டாலியன் போலீசார் பங்கேற்றனர்.
Tags:    

Similar News