வெள்ள பாதிப்பு: திமுக கவுன்சிலர் ஊதியம் வழங்கல்

திருப்பூரில் வெள்ளநிவாரணநிதிக்காக திமுககவுன்சிலர் தங்களது ஒருமாத ஊதியத்தை மேயரிடம் வழங்கினார்கள்.

Update: 2023-12-22 13:02 GMT

ஊதியத்தை வழங்கிய கவுன்சிலர்கள்

வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை மேயரிடம் கொடுத்த கவுன்சிலர்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பலரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கி வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி மற்றும 1-வது மண்டலத்திற்குட்பட்ட தி.மு.ககவுன்சிலர்களான ராதாகிருஷ்ணன்,பத்மாவதி,பிரேமலதா கோட்டாபாலு,அனுசுயாதேவி ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்காக மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News