ஊத்தங்கரை: லாரி மோதி பூ வியாபாரி உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே லாரி மோதி பூ வியாபாரி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-28 14:19 GMT

பூ வியாபாரி

 கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியை சேர்ந்தவர் சென்னையன் 50 இவர் பூ வியாபாரி பூக்களை வாங்கி தனது டூவிலரில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.

அது போல் இன்று விடிய காலை வழக்கம் போல் சென்னையன் தனது டூவிலரில் கல்லாவியில் இருந்து ஒலைப்பட்டி கூட்ரோட் பகுதியில் இருந்து கெரி கேப்பள்ளி கேட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். சாலமரத்துப்பட்டி என்ற இடத்திற்கு சென்றபோது தருமபுரியில் இருந்து ஊத்தங்கரையை நோக்கி வந்த மினி லாரி சென்னையின் மீது பயங்காரமாக மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட சென்னையன் சம்பவ இடத்திலே பரிபாதமாக உயிழந்தார்.

இது குறித்து கல்லாவி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய லாரி டைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News