மாதப்பூரில் பிரதமர் மோடி வருகை தரும் மைதானத்தில் கால்கோள் நடும் விழா

பல்லடம் அருகே மாதப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாநாடு நடைபெறும் மைதானத்தில் கால் கோள் நடுவிழா நடைபெற்றது.

Update: 2024-02-15 09:19 GMT

திருப்பூர் வடக்கு மாவட்டம் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை இணைந்து கலந்து கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு  நடைபெறும் மைதானத்தில் கால்கோள் நடும் விழா இன்று காலை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாநில பொதுச்செயலாளர் AP.முருகானந்தம் முன்னிலையில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, கோவை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் GKS செல்வகுமார்,  மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன் மந்திராசலம், விஜயகுமார், மாநில செயலாளர் மலர்கொடி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதாந்தம் கலந்தும் கொண்டனர்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் KCMB சீனிவாசன்,  பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், GKS.பாலு. மேலும் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News