ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எம்.எல்.ஏ தமிழ்செல்வம் தலைமையில் அதிமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-25 10:06 GMT

ஊத்தங்கரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் தலைமையில் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ சிலைக்கு அதிமுக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல் சொல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஒன்றிய செயலாளர்கள் தேவன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

  தொடர்ந்து ஊத்தங்கரை பேரூராட்சி 14 வார்டு இந்திரா நகர் காரப்பட்டு மற்றும் கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM தமிழ் செல்வம் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மேலும் கோல போட்டி நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.இ கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் இளையராஜா ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

Tags:    

Similar News