காசிதா்மத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காசிதா்மத்தில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-01-25 05:33 GMT


தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காசிதா்மத்தில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காசிதா்மத்தில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும் தமாகா தலைவருமான ஜி.கே.வாசனின் தொகுதி வளா்ச்சி நிதி மூலம் இத்தொட்டி கட்டப்படவுள்ளது. விழாவுக்கு, கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். ஊராட்சித் தலைவா் சுடலை மாடத்தி, துணைத் தலைவா் தங்கம், வாா்டு உறுப்பினா்கள் சிவனுப்பாண்டியன், இசக்கியம்மாள், ஜோதிலெட்சுமி, ஊராட்சிச் செயலா் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிதியுதவி பெற்றுத் தந்த தமாகா மாவட்டத் தலைவரும் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவருமான எஸ்.ஆா். அய்யாத்துரை வரவேற்றாா். பாலம் அமைக்க நிதி: அப்போது, காசிதா்மம் ராஜீவ் நகரில் பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை வைத்தனா். நிதி ஒதுக்கீடு செய்வதாக, தலைவா் தெரிவித்தாா்.
Tags:    

Similar News