நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அடிக்கல்

பூம்புகார் தொகுதியில் ரூ. 62.5 லட்சம் செலவில் நேரடி கொள்முதல் நிலையம் கட்டுமான பணி துவக்கவிழாவில் பூம்புகார் எம்எல்ஏ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-12-20 05:24 GMT

அடிக்கல் நாட்டு விழா  

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகில் உள்ள கிள்ளியூரில், நுகர் பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்திற்காக, இந்திய நபார்டு வங்கி நிதி உதவி மூலம், ரூபாய் 62.50 லட்சம் மதிப்பீட்டில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக்கழக செயலாளருமான நிவேதாமுருகன், கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். செம்பை ஒன்றியகுழு தலைவர் நந்தினிஸ்ரீதர் ,ஒன்றிய செயலாளர்கள் அமிர்த விஜயகுமார் , அப்துல் மாலிக், இமய நாதன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News