இண்டூர் அருகே சூதாடிய நான்கு பேர் கைது

தர்மபுரி மாவட்டம், கோடனூர் ஏரிக்கரை பகுதியில் சூதாடிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-15 02:08 GMT

இண்டூர் அருகே சூதாடிய நான்கு பேர் கைது

தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இண்டூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையிலான காவலர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோடனூர் ஏரிக்கரை பகுதியில் சென்ற போது, அங்குள்ள புதருக்குள் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், காவலர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (35), வெங்கடேன் (26), தங்கம் (30), நாகராஜ் (45) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
Tags:    

Similar News