நகை பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது !
நகை பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் செல்போன் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-03-19 07:28 GMT
நகை பறிப்
செங்கல்பட்டு மாவட்டம்,ஊரப்பாக்கம் அருகே காரனை புதுச்சேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சஜி தங்கப்பன் இவரது மனைவி அனு சூரியவர்ஷினி இவர் மார்ச் மாதம் 15 ஆம் தேதி இவர் கடைக்குச் செல்லும் போது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் ஆறுமுகம்( வயது 21), ஆனந்தன்( வயது22) சந்தோஷ் குமார்(வயது 19) தீபக் குமார் (வயது 22)ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.