புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது !
திருவாரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-03-05 05:20 GMT
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நெடுவாக்கோட்டை மேல தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் வீரமணி, மன்னார்குடி தாலுகா குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் கருணாநிதி, மன்னார்குடி உப்புகார தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் பிரசாத், மன்னார்குடி வடகரை சங்கு தீர்த்தம் பகுதியை சேர்ந்த கமால் பாட்ஷா என்பவரின் மகன் மைதீன் ஆகிய நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 13,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பணம் ரூபாய் 57,350 மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.