வேடசந்தூர் அருகே விலை உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கூறி மோசடி
வேடசந்தூர் ரனபாலபட்டியைச் சேர்ந்தவர் சிங்கராஜ் விலை உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கூறி திருப்பூர் காளியப்பனை வரவழைத்து ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு ரத்தினகல்லை கொடுத்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 08:41 GMT
போலி இரத்தினக்கல்
வேடசந்தூர் ரனபாலபட்டியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் தன்னிடம் விலை உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கூறி திருப்பூர் காளியப்பன்னை அய்யலூர் வரவழைத்து ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு ரத்தினகல்லை கொடுத்துள்ளார்.
அது போலி கல் என்பதை தெரிந்த காளியப்பன் பணத்தை திரும்ப பெற்றுள்ளார். முதல் தவணையாக ரூ.28,000 கொடுத்த நிலையில் மீதி பணத்தை தர மறுத்து விட்டார். இது குறித்து வடமதுரை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.