விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

தாளப்பட்டியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி எம்எல்ஏ சிவகாமசுந்தரி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-01-10 02:02 GMT

மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தாழப்பட்டி ஊராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்த பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலை மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Tags:    

Similar News