விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா
தர்மபுரி மாவட்டம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
Update: 2024-01-05 01:15 GMT
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) வி.விஜயகுமார், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர் திருமதி.விஜயலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.