இலவச கண் சிகிச்சை முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி அரிமா சங்கத்தின் சார்பாக கரூர் அரசன் கண் மருத்துவமனையின் இலவச கண்சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Update: 2024-02-04 11:53 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்

சோழசிராமணி அரிமா சங்கத்தின் சார்பாக கரூர் அரசன் கண் மருத்துவமனையின் இலவச கண்சிகிச்சை முகாம் சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா சந்திரசேகர் , கண் ஒளித்திட்ட மாவட்ட தலைவர் அரிமா பொன்னுசாமி , சோழசிராமணி சங்க செயலாளர் அரிமா சுரேஷ்குமார், பொருளாளர் அரிமா சதாசிவம் , கண்ணொளி திட்ட கிளை ஒருங்கிணைப்பாளர் சகா.கண்ணன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் 63 நபர்கள் காண்பரிசோதனை செய்து கொண்டனர். 20 நபர்கள் கண் புரை அறுவைசிகிச்சைக்காக கரூர் அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News