இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் மாவட்டம், அப்பம்பட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

Update: 2024-05-30 16:48 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கண் கண்ணாடி அணிய தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 40 பேருக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டு 40 பேருக்கு இலவச கண் கண்ணாடியை வழங்கினார். இதில் நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய பொருளாளர் இக்பால், தொண்டரணி பாஷா உட் பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சையது உஸ்மான் செய்திருந்தார்.
Tags:    

Similar News