தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

மறைமலைநகர் நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-06 14:30 GMT

மறைமலைநகர் நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டுமாவட்டம், மறைமலைநகர் நகராட்சி தமிழகத்திலேயே முதன்மை நகராட்சியாக செயல்பட்டு வரும் மறைமலை நகர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை மறைமலைநகர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் மற்றும் மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்..இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இந்த கண் சிகிச்சை முகாமில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

Tags:    

Similar News