இலவச நர்சிங் பயிற்சி: விண்ணப்பிக்கலாம்

அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-03-16 01:31 GMT

அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரவிந்த் கண் மருத்துவனை சார்பில் ஈராண்டு செவிலியர் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. பிளஸ் 2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும்.  பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, https://aravind.org/mlop-recruitment என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும். நேர்காணலின்போது +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy), ஆதார் அட்டை (Original + Xerox copy), மாற்றுச் சான்றிதழ் TC (Original + Xerox copy) ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News