இலவச பட்டா வழங்கும் விழா

புதுப்பட்டி கிராமத்தில் இலவச பட்டா வழங்கும் விழா நடந்தது.

Update: 2024-03-16 07:23 GMT

புதுப்பட்டி கிராமத்தில் இலவச பட்டா வழங்கும் விழா நடந்தது.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் இலவச பட்டா வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ., லுார்து பிரான்சிஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பெருமாள், துரைமுருகன், ரிஷிவந்தியம் ஒன்றியம் துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, சங்கராபுரம் ஒன்றிய துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சித்ரா தாஸ் வரவேற்றார்.விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., 197 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனை பட்டா வழங்கி, பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் அர்ச்சனா காமராஜன், ஷீலா ராஜேந்திரன், பரமசிவம், பிலோமினா இருதயராஜ், ஒன்றிய கவுன்சிலர் விமலா பாண்டுரங்கன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News