பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-05-22 02:44 GMT

தையல் பயிற்சி

தென்காசி மாவட்டம் ,சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடத்தில் சிவசாம்பவா சேவா சங்கத்தின் சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு சுய தொழில் கற்றுத்தரும் விதமாக இலவச தையல் பயிற்சி தொங்கப்பட்டது. இதில் சிவசாம்பவா சேவா சங்கத்தின் அறங்காவலர் சிவகுரு தலைமை தாங்கினார்.

மருத்துவர் சதீஸ் முன்னிலை வசித்தார். பா.ஜ.க வின் குருவிகுளம் ஒன்றிய தலைவர் ராமசந்திரன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பேரியக்கத்தின் தென்மண்டல அமைப்பாளர் அந்தோணிசாமி, அலுவலக செயலாளர் பிரவின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் அறங்காவலர் சிவகுரு திருவேங்கடத்தில் நடைபெறும் இலவச தையல் பயிற்சியில் குருவிகுளம் ஒன்றிய சுற்றுவட்டார ஏழை எளிய பெண்கள் இப்பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் தற்சார்பு பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள அழைப்பு விடுத்தார்.

Tags:    

Similar News