தொழிலதிபர் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம்

பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Update: 2023-12-10 11:20 GMT

சித்த மருத்துவ முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சியில் தொழிலதிபர் அருண்நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மகனும், தொழிலதிபருமான அருண் நேரு பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகரில் உள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகராட்சி முன்னாள் சுகாதார குழு தலைவர் டாக்டர் தமிழரசி சுப்பையா ஆகியோர் இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இலவச சித்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சளி, இருமல், மருந்துகள், இலவச உணவு பொட்டாலங்கள், பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டி, ராஜா டாக்டர் மதிகுமார், டாக்டர் ரவி அகமது, சுசிலா, சாந்தி, மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News