கப்பற்படையில் சேர இலவச பயிற்சி பிப்.8-ந் தேதி கடைசி நாள்

கடலோர காவல், இந்திய கப்பற்படையில் சேர மீனவ குடும்பங்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற பிப்.8-ந் தேதி கடைசி நாளாகும்.

Update: 2024-01-23 13:47 GMT

கோப்பு படம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையும் நவிக் மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பணிகளிலும் சேர்வதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படுகிறது. 

இதன்படிஇந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது), மாலுமி பணிகள் மற்றும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளில் மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அளிக்கப்படவிருக்கும் (வழிகாட்டுதல்) சிறப்புப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவதற்கு இணைப்பில் கண்டுள்ள வறையறுக்கப்பட்ட படிவத்தில் தகுதியான விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.02.2024, மாலை 17.45 மணிக்குள் விண்ணப்ப படிவம் மற்றும் மேலும் விபரங்களுக்கு : https://drive.google.com/drive/folders/10LkWukq_HyRgbyrerIchqzQRhGx6A-wn

Tags:    

Similar News