திருமழிசையில் அடிக்கடி மின்தடை !
திருமழிசை தொழிற்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
Update: 2024-04-08 08:21 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மின்தடை ஏற்பட்டதும் புகாா் அளித்தால் மின்வாரிய துறை ஊழியர்கள் காலதாமதமாக வந்து சரிபார்க்கின்றனர். இதுகுறித்து பலமுறைபுகார்அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.