பணம் வைத்து சூதாட்டம் - இருவர் கைது

தும்பிவாடி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-02-04 03:02 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட, தும்பிவாடி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருப்பதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில்  தும்பிவாடி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், தும்பிவாடி சக்தி நகரை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் பணம் வைத்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் 
Tags:    

Similar News