காந்தி நினைவுநாள் - பாமகவினர் அஞ்சலி
காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி ஆத்தூர் காந்தி ஆசிரமத்தில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Update: 2024-01-31 05:30 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்புறத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இன்று காந்தியடிகளின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாவட்டம் கொள்கை பரப்பு தலைவர் கல்பனா வெங்கடேசன் தலைமையில் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி ஒரு நிமிடம் மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் காந்தி ஆசிரமத்தின் நிர்வாகி அரசு உடன் இருந்தார்.