டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி பணம் பறித்த கும்பல்

மல்லசமுத்திரம் அருகே டாஸ்மாக் கடை சேல்ஸ்மேனை தாக்கி பணம் பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2024-06-02 02:36 GMT

பைல் படம் 

மல்லசமுத்திரம் அருகே, மங்களம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கிருஷ்ணமூர்த்தி 53 என்பவர் சூப்பர் வைசராகவும், தண்டபானி47 என்பவர் சேல்ஸ்மேனாகவும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 10மணிக்கு வழக்கம்போல டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கணக்குவழக்கு பார்த்துவிட்டு, 10;30மணியளவில் அவர்களது இருசக்கர வாகனங்களில் 100அடி இடைவெளியில் தனித்தனியாக சென்றுள்ளனர்.

அப்போது, மூலவயல்காடு பகுதியில் பின்னால் சென்றுகொண்டிருந்த சேல்ஸ்மேன் தண்டபானியை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்மநபர்கள் வழிமறைத்து கீழே தள்ளி பையில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 37ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வாகனத்தில் சென்றுவிட்டனர். இதில், தண்டபானிக்கு உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் வழக்குபதிவுசெய்து, பணத்தை திருடிசென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News