பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-02-22 04:31 GMT
கஞ்சா பறிமுதல்
நாகை வழியாக மற்ற மாவட்டம் மற்றும் மாநில பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக திருக்கண்ணபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் உட்ரோ வில்சன் (பொறுப்பு) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர்அலி மற்றும் தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம் போலீசாரத்திற்கு உட்பட்ட அண்ணாமண்டபம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு தனியார் பஸ்ஸில் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.அந்த சாக்குபையில் 21 கிலோ கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், திருப்புகலூர் ஊராட்சி தெற்குலேரி புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ் மகன் பாஸ்கரன் (வயது 51) என்பதும்,இவர் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.