லாரி,காரில் கஞ்சா கடத்தல் - 40 கிலோ பறிமுதல், இருவர் கைது

உசிலம்பட்டி அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காரில் மாற்றப்படுவதை கண்டறிந்த போலீசார் இருவரை கைது செய்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-29 08:44 GMT

காவல் நிலையம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லாரியிலிருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, காரில் மாற்றம் செய்து விற்பனை செய்ய உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலிசார் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது லாரியில் கஞ்சா கடத்தி வந்து காரில் மாற்றம் செய்வதை கண்டறிந்த போலீசார்., இந்த கடத்தல் தொடர்பாக லாரியை இயக்கி வந்த விருதுநகரைச் சேர்ந்த சேதுபதி, காரை இயக்கி வந்த கீரிபட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
Tags:    

Similar News