சாக்கடையில் கொட்டும் குப்பையால் சுகாதாரக்கேடு

சாக்கடையில் கொட்டும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-18 12:28 GMT

குவிந்துள்ள குப்பைகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திறந்தவெளி சாக்கடை,குப்பையால் அவதி ,கொசுத்தொல்லையால் நோய் தொற்று அச்சம் , தெரு நாய்களால் அட்டகாசம் என திண்டுக்கல் மாநகராட்சி 23 வது வார்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

திண்டுக்கல் ஆர்.வி.நகர், சின்னக்காளை நகர், மதுரைவீரன் கோயில் தெரு என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பெரும்பாலான ரோடுகள் சரிசெய்யப்பட்டிருந்தாலும் சில இடங்களில் சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த வார்டு பகுதி மக்கள் மட்டுமில்லாது பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சாக்கடையில் குப்பை கொட்டிச் செல்கின்றனர்.

இதனால் சாக்கடை நீர் தேங்கி நோய்தொற்றுக்கு வழிவகுக்கும் சூழல் உள்ளது.

Tags:    

Similar News