சேலத்தில் பூண்டு விலை உயர்வு !

சேலத்தில் பூண்டு விலை உயர்வு - ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகின்றன.

Update: 2024-07-03 05:24 GMT

பூண்டு

சேலம் மாவட்டத்திற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நேற்று சேலத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.300-க்கு விற்பனை ஆனது. விலை உயர்வுக்கு காரணம் குறித்து மொத்த வியாபாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- மத்திய பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் சேலத்திற்கு வழக்கத்தை விட பூண்டு வரத்து குறைந்து உள்ளது.

இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆன பூண்டு இன்று (நேற்று) ரூ.100 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. மளிகை பொருட்கள் அதே போன்று ரூ.100-க்கு விற்பனையான பொட்டுக்கடலை ரூ.110-க்கும், ரூ.90-க்கு விற்பனையான கடலை பருப்பு ரூ.100-க்கும், ரூ.130-க்கு விற்பனையான உளுந்து ரூ.140-க்கும் என சற்று விலை உயர்ந்து விற்பனையானது. மேலும் பாசிப்பயிறு, மல்லி, மிளகாய் மிளகு, சீரகம் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை உயர்ந்து விற்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News