மேட்டூரில் மர்ம விலங்கு நடமாட்டம்

மேட்டூரில் மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொறுத்தபட்டுள்ளது.

Update: 2023-12-14 13:20 GMT

கண்காணிப்பு கேமரா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரி, வெள்ளார் ஊராட்சியை சேர்ந்தவர் விவசாயி சந்திரன்(60). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இவரது தோட்டத்தில் இருந்த இரண்டு பசு மாடுகளை மார்ம விலங்கு கடித்து காயப்படுத்தியது.

இது குறித்து விவசாயி சந்திரன் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். மர்ம விலங்கு கால் தடத்தை பதிவு செய்து எடுத்துச் சென்றனர். மேலும் வனவிலங்கு நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

இதனை அடுத்து இன்று அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆபாச பொருத்தப்பட்டு மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News