வேப்பநதட்டை அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை துவங்குகிறது.

Update: 2024-06-09 03:27 GMT

பைல் படம் 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பநதட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேப்பந்தட்டை அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதாவது பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10-ந் தேதி (திங் கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

நேரில் வரும்போது மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் எடுத்து வரவேண்டும். அதாவது 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்,மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் மற்றும் 10 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் நேரில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News