மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

செய்யாறில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-01-26 12:25 GMT

 செய்யாறில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகே செய்யாறு நகர அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் செய்யாறு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட மாணவரணி செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பார்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் மற்றும் அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் எஸ்.அப்துல் ரஹீம், புலவர் நா. ராசகோபால் ஆகியோர் மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை எடுத்துக் கூறி மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், துரை, திருமூலன் அவைத் தலைவர் ஜனார்த்தனன் அதிமுக நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன்,தணிகாசலம், சுரேஷ், திருச்சிற்றம்பலம், பெயிண்டர் ராஜி, பாலாஜி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News