குற்றாலத்தில் அதிமுக கட்சியின் பொதுக்கூட்டம்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-03 06:03 GMT
குற்றாலத்தில் அதிமுக கட்சியின் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. குற்றாலம் பேரூர் அதிமுக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான எம். கணேஷ் தாமோதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினரு மான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.

குற்றாலம் பேரூர் அதிமுக அவைத்தலைவர் சங்கர்ராமன், இணை செயலாளர் ஜானகி, துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், துணை செயலாளர்கள் ஜெயா, நாராயணன் மாவட்ட பிரதிநிதிகள் வீரபாண்டி மாரீஸ்வரி பரமசிவன், எம்ஜிஆர் மன்ற பேரூர் செயலாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அதிமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தூத்துக்குடி சரவண பெருமாள், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான ஆலங்குளம் பி ஜி ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எஸ் கே சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமி பாண்டியன் (எ) லாட சன்னியாசி உள்ளிட்ட யாராலமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News