தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை

வலங்கைமான் அருகே தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்தகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-28 07:19 GMT

மாணவி தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் லக்க்ஷனா ஸ்ருதி இவர் வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போன் டிவி பார்த்ததை தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் மன வேதனை அடைந்த லக்க்ஷனா ஸ்ருதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார் இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News