ஏரியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை

காரிமங்கலம் அருகே குட்டூரில் ஏரியில் இறங்கிய சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-19 02:11 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே உள்ள குட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருடைய மனைவி சரசை இவர்களுக்கு சித்ரா என்ற மகள் இருந்தார். சித்ரா அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் கணவன் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக சரசு தனது மகள் சித்ராவுடன் தனியாக வசித்து வந்தார் இதன் நிலையில் நேற்று மாலை சரசு தனது மகளுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டி சென்றார். இதனை அடுத்து சரசு ஆடுகளை மேச்சலுக்கு விட்டபோது அப் பகுதியிலுள்ள ஏரியில் சித்ரா இறங்கியதாக தெரிகிறது. அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற சித்ரா தண்ணீரில் எதிர்பாராத விதமாக மூழ்கினார். இதனை கண்ட சரசு சத்தம் போட்டு உதவிக்கு சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் விரைந்து வந்து ஏரியில் இறங்கி தேடினார்கள் ஆனால் சிறுமியின் சடலத்தை தான் அங்கிருந்து அவர்கள் மீட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று காரிமங்கலம் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் தொடர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News