சிறுபான்மை மக்கள் விடுதலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.ஜி.கே.வாசன்

சிறுபான்மை மக்கள் விடுதலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-10-27 12:09 GMT

ஜி.கே.வாசன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளதாகவும் குடியரசு  தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரத்தில் அவர் தங்க கூடிய இடத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது எனவும் சாதாரண மக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது என்றவர் தமிழகத்தினுடைய பாதுகாப்பு குறிப்பாக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளதாகவும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளதாக கூறினார்.ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முக்கிய பிரச்சனை என்ன? என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.பெட்ரோல் குண்டு வீசியவரை முந்தை வழக்கில் பாஜகவை சார்ந்த வழக்கறிஞர் பினையில் எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு பொய்யான தகவல்களுக்கு  பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடின உழைப்பால் உயர்ந்து மற்ற மாநில மாணவர்களுக்கு சவாலாக செயல்பட்டு வருவதாகவும் அதற்கேற்ப நீட் தேர்வு சதவீதம் உயர்ந்து வருகிறது என்றார்.தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் பெற்றோர்களையும் மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரில் குழப்ப கூடாது எனவும் மாணவர்கள் கல்வி பயிலும் போது அதற்கு இடையூறாக இருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவையற்ற செயல் என்றார்.திமுகவிற்கு உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என நினைத்தால் சட்ட ரீதியாக செல்லக்கூடிய நிலையை  ஏற்படுத்த வேண்டுமே தவிர அரசியல் ரீதியாக மாணவர்கள் பெற்றோர்களை குழப்புவது ஒருபோதும் சரியல்ல என்றார்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது எனவும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை உதவியுடன் எதிர்க்கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றபடுவதாக குற்றம்சாட்டினார்.சிறுபான்மை மக்கள் விடுதலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது மக்கள் மன்றத்தில் ஒரு பேச்சு நீதிமன்றத்தில் ஒரு பேச்சு என அவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள்  பார்த்துக்கொண்டு இருப்பதாகவ ஜி.கே வாசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News