சந்தைப்பேட்டையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2024-06-16 08:28 GMT

ஆடுகள் விற்பனை

தர்மபுரி சந்தப்பேட்டையில் இன்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெற்று வருகிறது இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான சோலை கொட்டாய் ,செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி,நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை,தடங்கம், ஒட்டப்பட்டி, போன்ற பகுதியில் இருந்தும் மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 350க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 4000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 30000 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News