பெண்ணின் கழுத்திலிருந்த தங்க நகை பறிப்பு - போலீசார் விசாரணை
மறைமலைநகர் அருகே பெண்ணின் கழுத்திலிருந்த 12 சவரன் தங்க நகையை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-03-04 09:56 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் அருகே கருநீளம் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா( வயது 32). இவர் தாம்பரம் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்லும் போது பிரேமாவதி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எந்த திசையில் வந்த இரண்டு வாலிபர்கள் வெண்ணிலாவே கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர். சம்பவம் குறித்து வெண்ணிலா மறைமலைநகர் காவல்நிலையில் புகார் அளித்தார் புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.