இராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்து சிறை பிடிப்பு

இராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்து சிறை பிடிக்கப்பட்டத்து.

Update: 2024-02-27 09:22 GMT

சிறைபிடிக்கப்பட்ட பேருந்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச .உமா ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இ.எஸ்.முருகேசன் தலைமையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி து. நித்யா மற்றும் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் வை.சக்திவேல் ஆகியோர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சேலம் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த தனியார் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனை அடுத்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து சிறை பிடிக்கப்பட்டு ராசிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News