அரசு பேருந்து மோதி மெக்கானிக் பலி
தென்காசி அருகே அரசு பேருந்து மோதி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-31 07:50 GMT
அரசு பேருந்து மோதி மெக்கானிக் பலி
தென்காசி மாவட்டம், கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் என்பவர் மகன் ராஜ்குமார் (24).இவர் பாவூர்சத்திரத்தில் நேற்று இரவு ஒர்க் ஷாப்பில் வேலை முடித்துவிட்டு தனது ஊருக்கு மோட்டார் சைக்கிள் திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாதாபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .