செல்ப் எடுக்காமல் நின்ற அரசுப்பேருந்து : தள்ளி ஸ்டார்ட் செய்த மாணவர்கள்

தளி பேருந்து நிலையத்தில் செல்ப் எடுக்காமல் நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் கைகளால் தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவினர்.

Update: 2024-05-12 02:43 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் பல்வேறு மலை கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தளி பேருந்து நிலையத்தில் தளியிலிருந்து ஓசூருக்கு செல்வதற்காக நின்ற ஒரு அரசு பேருந்து செல்ப் எடுக்காததால் இயக்கப்படாமல் நின்றது.

இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அந்த பகுதியில் சென்று பள்ளி மாணவர்களை பேருந்தை தள்ளி விடுமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை கைகளால் தள்ளி சென்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஸ்டார்ட் செய்து பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் நோக்கி ஓட்டி சென்றார்.

Tags:    

Similar News