பரமக்குடி பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா
பரமக்குடி பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா
By : King 24x7 Website
Update: 2024-02-22 13:14 GMT
பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கிராமத் தலைவர் முத்து ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நீலகண்ட பூபதி வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கவிஞர் இதயா கலந்துகொண்டு வானம் வசப்படும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி குழந்தைகளும் பெற்றோர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.