அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1984-88 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-09 04:58 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-88 ஆண்டுகளில் 9,10,11,12ம் வகுப்பு படித்தவர்கள் சந்திப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை தாங்கினார். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய இளங்கோவன், துரைராஜன், ஆறுமுகம் ஆகிய ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி பருவ காலங்களில் நடைபெற்ற சுவாரசியங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்த அவர்கள் தங்கள் படித்த வகுப்பறைகளில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் தங்கள் குடும்பம், குழந்தைகள், வேலை பற்றி ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். கடலூர் துணை ஆட்சியர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை 108 சிவாலயம் மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் செல்வ முத்துக்குமார் உட்பட முன்னாள் மாணவர்கள் கலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News