போளூர்: அதிகாரிகள் ஆய்வு!

போளூரில் ரூ.84.66 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-09 02:18 GMT

அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூபாய் 84.66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் திரு. தீரஜ் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News