தாமிரபரணியில் படிப்படியாக குறைந்த நீர்

தாமிரபரணியில் படிப்படியாக நீர் குறைந்தது.

Update: 2024-01-07 15:58 GMT
தாமிரபரணி ஆறு 

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்தது. அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது.இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் தாமிரவருணி ஆற்றில் சுமார் 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதோடு பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளமும் ஆற்றில் கலந்ததால் சனிக்கிழமை காலையில் சுமார் 4,500 கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. மாலையில் படிப்படியாக குறைந்த 3000 கன அடி நீர் தாமிரவருணி ஆற்றில் சென்றது.

Tags:    

Similar News