குறைதீர் கூட்டம்: 347 மனுக்கள் குவிந்தன!
Update: 2023-12-19 05:33 GMT
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 347 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சிரம்யா உத்தரவிட்டார் தனி டிஆர்ஓ சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.