நாமக்கல்லில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோருக்கான குறைத்தீர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

Update: 2024-02-07 01:29 GMT

மின் நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்

நாமக்கல்லில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும், கோட்ட அலுவலகங்களில் மின்சாரம் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மாவட்ட மேற்பார்வை பொறியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு, மின் நுகர்வோரின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதையொட்டி, பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் சிவகுமார் தலைமையில்,நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் (பிப்ரவரி 7ம் தேதி) புதன்கிழமை காலை 11 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் கூட்டத்தில் கலந்துகொண்டு, மின் நுகர்வோரின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார்.

எனவே பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை, மனுவாக எழுதி சம்மந்தப்பட்ட, செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும், குறைதீர் கூட்டத்தில் வழங்கி பயன்பெறலாம்.

Tags:    

Similar News