திண்ணைப் பிரச்சாரம் மூலம் குறைகள் கேட்பு

திண்டுக்கல் மாநகர் பகுதிகளில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

Update: 2024-03-01 09:18 GMT

திண்ணை பிரச்சாரம்

திண்டுக்கல்,10-வதுவார்டு செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டார். இப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

24 மணி நேரமும் மக்களைப் பற்றிய சிந்தித்து நல்ல பல திட்டங்களை தீட்டி வருகிறார். அவரின் பணியை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பொதுமக்களிடம் கேட்டுப் பெறுகிறார்.

ஏராளமான படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வேலைகளும் வழங்கப்படுகிறது. வேலையில்லாதவர்கள் ஏழைகளும் தமிழகத்தில் இனிமேல் இருக்க முடியாது. அனைவரும் உயர்வு பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News