குட்கா பதுக்கி விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது

சேலத்தில் குட்கா பதுக்கி விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-29 16:37 GMT

கோப்பு படம் 

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மளிகை கடை உரிமையாளர் அப்துல் ரசாக்கை பிடித்து விசாரித்தனர். அதில், செவ்வாய்பேட்டையை சேர்ந்த விசால், அப்துல் ரசாக்கிற்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடையில் இருந்து ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள 64 கிலோ குட்கா,புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரசாக்கை கைது செய்தனர். குட்கா சப்ளை செய்த விசாலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News